கோரிக்கை பதிவு

வங்கிகளில் ஆவணங்களை தமிழில் வழங்க கோரிக்கை

புவனகிரி நுகர்வோர் உரிமை பாது காப்பு பேரவை சார்பில் தலைவர் செயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அனைத்து ஆவணங்களும் தமிழில் வழங்கவேண்டும் என நுகர் வோர் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அஞ்சல் அலுவலகங்களில் மாநில மொழிகளிலேயே மணியார்டர் விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஆவணங்களை தமிழில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து தமி ழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விரைந்து செயல்பட்டு வங்கிகளின் ஆவணங்களை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண் டும்” என கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக