கோரிக்கை பதிவு

இன்னும் 40 ஆண்டுகளில் துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் : நெய்வேலி பேராசிரியர் கருத்து

நெய்வேலி புதுநகர், 14-வது வட்டம் ஜவகர் அறிவியல் கல்லூரியில், குடிமக்கள், நுகர்வோர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் இணைந்து “உலக வெப்பமயமாதல்” விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவே கானந்தன் வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்கினார். உலக சுற்றுப் புறச்சூழல் துறை பேராசிரியர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

இன்றைய தினம் உலக நாடுகள் அனைத்தும் உலக வெப்ப மயமாகி வருவதை எண்ணி திகிலடைந்த வண்ணம் உள்ளனர். பல பனிப்பிரதேச நகரங்கள் உலககெங்கும் உலக வெப்ப மயமாவதால் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து வருகிறது.

இதேபோல் நீடித்தால் இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கி இருந்த இடமே தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

எனவே சுற்றுப்புற சூழழை பாதுகாத்து உலக வெப்பமயமாதலை எதிர்த்து போராட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இதை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் முருகவேல் பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பேராசிரியர் பதில் அளித்து விளக்கம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக