கோரிக்கை பதிவு

யானைக்கால் நோய் ஒழிப்பு பணி: டி.இ.சி., மாத்திரை இன்று வினியோகம்

பொது மக்கள் டி.இ,சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்."கியூலக்ஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவும் யானைக்கால் என்னும் கொடிய நோய் ஒழிப்பு பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனைப்படி ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட ஒரே நாளில் அனைவரும் தமது வயதிற்கு ஏற்ப டி.இ.சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதால் இந்நோயினை அறவே ஒழிக்க முடியும்.இதனை கருத்தில் கொண்டு பொது சுகாதாரத்துறை அறிவுரையின்பேரில் குறிப்பிட்ட அனைவரும் உட்கொள்ளும் நிகழ்வு மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) நடக்கிறது.

100 மி.கி., கொண்ட டி.இ.சி., மாத்திரைகள் 2-5 வயதுள்ளோருக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு இரண்டும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றும், அவரவர் வயதிற்கேற்ப வழங்கப்படும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற் பட்டவர், நீண்ட காலமாக நோய்வாய் பட்டவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இம் மாத்திரைகளை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒருசிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுமாயின் அது அவர்களின் உடலுக்குள் உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப்படுவதன் விளைவேயின்றி அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

1 கருத்து: