கோரிக்கை பதிவு

மருந்தாளுனர் பட்டயப் படிப்பு பதிவுகளை சரிபார்க்க கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அழைப்பு

கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மருத்தாளுனர் பட்டயப்படிப்பு  பதிவு செய்துள்ளவர்கள் நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ள  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகத் தால் மருந்தாளுனர் பணி இடங்களை நிரப்புவதற்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பட்டியல் கேட்கப் பட்டுள்ளது. இந்த பணி இடத்திற்கு எஸ்.எஸ். எல்.சி., தேர்ச்சி பொது தகுதியும், மருந்தாளுனர் பட்டயப்படிப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும்  தாழ்த்தப் பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், முஸ்லீம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச வயது 1-7-2009  அன்று 18 வயதும், அதிபட்ச வயது வரம்பு இல்லை.
ஆனால் அனைத்து முற்பட்ட வகுப்பினருக்கு 18 வயது முதல் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். எனவே மேற்கண்ட தகுதியுடன் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 16-2-2010 ம் தேதி வரை பதிவு செய்துள்ள மனு தாரர்கள், தங்கள் பதிவு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 25ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் வந்து  தங்கள் பதிவுகளை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

2 கருத்துகள்: