கோரிக்கை பதிவு

அரசு மருத்துவக் கல்லூரி துவக்க முதல்வருக்கு கவுன்சிலர் கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத் துவ கல்லூரி துவக்கக் கோரி முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன் றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியும்,  இன்ஜினியரிங் கல்லூரிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி துவக் கப்பட்டது. அதேபோல் இந்த பகுதிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக