கோரிக்கை பதிவு

பள்ளி செல்லா குழந்தைகள் கடலூரில் 63 பேர் கண்டுபிடிப்பு

கடலூர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதில் 2 நாட்களில் 63 மாணவ& மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர். வரும் 15 தேதி வரை மாவட்டம் முழுவதும் 13 வட்டார வள மையபகுதியிலும் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
நாட்டில் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டாய ஆரம்ப கல்வி சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்விதிட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மாநில அரசுகளின் உதவியுடன் மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 6 வயது முதல் 14 வயது வரையுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி கடலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 24 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து பள்ளியில் இடை நின்ற மாணவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிந்து கல்வியின் முக்கியதுவத்தை கூறி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி பணியின் துவக்க விழா நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி) மற்றும் நேற்று (8ம் தேதி) இரண்டு நாட்களில் 91 கிராம பகுதி குடியிருப்புகள் மற்றும் 8 நகராட்சி வார்டு பகுதியில் கடலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிரிஸ்டி எமரால்ட், ஒருங்கிணைப்பாளர் அனந்தநாராயணன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி பகுதியில் 8, கிராமபுறங்களில் 55 மாணவ& மாணவி கள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட் டது.
மாவட்டம் முழுவதும் 13 ஒன்றியங்களில் இந்த கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி செல்லா குழந்தைகளின் மொத்த பட்டியலும் கணக்கிடப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணவ& மாணவிகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக அவர்களது குடும்ப சூழ்நிலையை இருப்பதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாணவ& மாணவிகளையும் மீண்டும் அவர்களது குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
15ம் தேதி வரை கணக்கெடுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக