கோரிக்கை பதிவு

கடலூர் மாணவிக்கு ​ இரு வெள்ளிப் பதக்கங்கள்

சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில்,​​ கடலூர் மாணவி ஆர்.அஜித்தாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.கடலூர் ஏ.ஆர்.எல்.எம்.​ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி அஜித்தா.​ உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் காமன்வெல்த் யோகா போட்டி,​​ பிப்ரவரி ​ முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடந்தது.இதில் அஜித்தா கலந்து கொண்டார்.​ யோகாசனப் போட்டிகளில் அவர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.​ இதற்காக மாணவி அஜித்தாவுக்கு பாராட்டு விழா கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்தது.​ மாணவி அஜித்தாவை பாராட்டி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரும்,​​ ஜூனியர் சேம்பர் முன்னாள் மண்டலத் தலைவருமான ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.அஜித்தாவுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியை பிரேமா முருகேசன் பாராட்டப்பட்டார்.​ ​நிகழ்ச்சிக்கு ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகர் தலைமை வகித்தார்.​ கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.அகில இந்திய ரயில் நிலைய அலுவலர்கள் சங்க இணைச் செயலர் எம்.ராஜன் ​(அஜித்தாவின் தந்தை),​​ தென் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ ஜூனியர் சேம்பர் செயலர் சிவகுமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக