கோரிக்கை பதிவு

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மாவட்டத்தில் 157 மையங்களில் நடக்கிறது

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு 157 மையங்களில் நடக்கிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு 23ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2வில் 29 ஆயிரத்து 528 பேர் 61 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 36 ஆயிரத்து 592 பேர் 96 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள்கள் சென்னை அரசு தேர்வுகள் இக்குனரகத்திலிருந்து நேற்று மாலை கடலூர் வந்தது.
இக்கேள்வித்தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 2 மையங்கள், நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், திட் டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது. தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க 1 குழுவிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 10 "டீம்'கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சி.இ.ஓ., 2 டி.இ.ஓ.,க்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ஆகியோர் தலைமையிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொள்வர்.சோதனையின் போது பிடிபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாமல் தண்டிக்கப்படுவார்கள். பிரச்னைக்குரிய இடங் களாக கருதப்படும் பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தேர்வையொட்டி கலெக்டர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட் டம் நடந்தது. இதில் முறைகேடுகள் நடைபெறாதவாறு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், சி.இ.ஓ., அமுதவல்லி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழிதேவி, டி.இ.ஓ.,க்கள் குருநாதன், கணேசமூர்த்தி, தொடக்க கல்வி அலுவலர் விஜயா, டி.எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக