கோரிக்கை பதிவு

கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: கோட்டாட்சியர் ஆய்வு

கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் ஆய்வு செய்தார். கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்து வருகிறார்கள். கடலூரில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இப்பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார். நிலை அலுவலர்கள் சரியான முறையீட்டு விவரங்களை பெற்றுள்ளனரா எனக் கேட்டறிந்தார். கோட்டாட்சியருடன் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர் என செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக