கோரிக்கை பதிவு

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கடலூரில் முத்துக்குமார் நினைவு தினம்

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவு தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கடலூரில் அனுசரிக்கப்பட்டது. கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக வந்தனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முத்துகுமார் பற்றி பலர் பேசினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் அறிவுடை நம்பி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் திருமேனி, அறச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சோ.பிரபு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன், கடலூர் நகராட்சித் தலைவர் தாமரைச் செல்வன், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலாலர் திருமார்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு, நகரச் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக