கோரிக்கை பதிவு

கட​லூ​ரில் கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க ​ ​பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை

கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க,​​ கட​லூர் பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை கட்​டும் பணி தொடங்​கப்​பட்டு இருக்​கி​றது.​ ​க​ட​லூ​ரை​ யும் புதுவை மாநி​லம் கும்​தா​மேடு ​(பரிக்​கல் பட்டு ஊராட்சி)​ பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ இப்​ப​கு​தி​யில் பெண்ணை ஆற்​றின் வடக்​குக் கரை புதுவை மாநி​லத்​தி​லும்,​​ தெற்​குக் கரை கட​லூர் மாவட்​டத்​தி​லும் உள்​ளது.​ கட​லூர் அருகே தாழங்​குடா கடற்​க​ரை​யில் பெண்​ணை​யாறு கட​லில் சங்​க​மிக்​கி​றது.​ ​தா​ழங்​கு​டா​வில் இருந்து 15 கி.மீ.​ தூரம் வரை கடல் நீர் உள்​பு​குந்து விட்​டது.​ இத​னால் பெண்​ணை​யாற்​றின் கரை​யில் உள்ள கட​லூர் மாவட்​டம் மற்​றும் புதுவை மாநி​லத்​தில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் விளை நிலங்​க​ளில்,​​ நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ இத​னால் கட​லூர் நக​ரில் குடி​யி​ருப்​புப் பகு​தி​க​ளி​லும் நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ ​எ​னவே பெண்ணை ஆற்​றில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்று கட​லூர் எம்​எல்ஏ கோ.அய்​யப்​பன் தொடர்ந்து சட்​டப் பேர​வை​யி​லும் மாவட்ட நிர்​வா​கத்​தி​ட​மும் கோரிக்கை எழுப்பி வரு​கி​றார்.​ புதுவை மாநில விவ​சா​யி​க​ளும் விளை நிலங்​கள் பாதிக்​கப்​ப​டு​வ​தைத் தடுக்க இதே கோரிக்​கையை முன் வைத்​த​னர்.​பு​துவை மாநி​லம் மத்​திய அர​சின் நேரடி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் யூனி​யன் பிர​தே​ச​மாக இருப்​ப​தா​லும்,​​ திட்​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிதி தாரா​ள​மா​கக் கிடைப்​ப​தா​லும்,​​ விவ​சா​யி​க​ளின் கோரிக்​கையை ஏற்று பெண்ணை ஆற்​றில் தடுப்​பணை கட்ட முன்​வந்து இருக்​கி​றது.​ கட​லூர் மாவட்ட நிர்​வா​கத்​தின் ஒப்​பு​த​லு​டன் இந்​தத் தடுப்​பணை,​​ புதுவை அர​சால் ரூ.12 கோடி​யில் கட்​டப்​ப​டு​கி​றது.​ ​க​ட​லூர்-​ கும்​தா​மேடு இடையே 254 மீட்​டர் நீளத்​தில் 5 அடி உய​ரத்​தில்,​​ இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ கட​லூர்-​ கும்​தா​மேடு இடையே பெண்ணை ஆற்​றின் குறுக்கே இரு​மா​நில மக்​கள் பயன்​ப​டுத்​தும் பால​மா​க​வும் இது அமை​யும்.​ ​த​டுப்​பணை கட்டி முடிக்​கப்​பட்ட பின்,​​ கடல் நீர் உள்​பு​கு​வது பெரு​ம​ள​வுக்​குத் தடுக்​கப்​ப​டும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ஆண்​டின் பெரும்​ப​குதி நாள்​கள்,​​ ​ தடுப்​ப​ணை​யில் இருந்து ஆற்​றில் குறைந்த பட்​சம் ஒரு கி.மீ.​ தூரத்​துக்கு ​ தண்​ணீர் தேங்கி நிற்​க​வும் வாய்ப்பு உள்​ளது.​ ​ இத​னால் இரு மாநி​லங்​க​ளை​யும் சேர்ந்த 5 ஆயி​ரம் ஏக்​கர் விளை நிலங்​கள் உவர் நீரில் இருந்து காப்​பாற்​றப்​ப​டும் என்​றும் எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ​பு​துவை அரசு இந்​தத் தடுப்​ப​ணை​யைக் கட்​டு​வது போல்,​​ தமி​ழக அர​சும் ​ பெண்ணை ஆற்​றில் மேலும் சில இடங்​க​ளில் தடுப்​ப​ணை​க​ளைக் கட்ட வேண்​டும்.​ அத​னால் கடல் நீர் உள்​பு​கு​வது தடுக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ பெண்ணை ஆற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்டு ஆண்​டு​தோ​றும் வீணா​கக் கட​லில் கலந்​து​கொண்டு இருக்​கும் நீர்,​​ தடுப்​ப​ணை​க​ளில் தேக்கி வைக்​கப்​பட்டு,​​ இப்​ப​கு​தி​க​ளில் நிலத்​தடி நீர் மட்​டம் உயர ஏது​வாக இருக்​கும் என்​றும் எம்​எல்ஏ அய்​யப்​பன் தெரி​வித்​தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக