கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கு பணி நடந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள், வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.பெயர்களில் திருத்தம், நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டுப்போடத் தகுதியானவர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், பணியாளர்கள் அதைப் பதிவு செய்து வந்து, கணினியில் பதிவு செய்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்குப் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான படிவம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் கடலூர் அருகே பாதிரிக்குப்பம் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை தணிக்கை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக