கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் விதவைகள்-ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் விதவைகள், ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெறவிண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம் மற்றும் இந்திராகாந்தி தேசியஉடல் ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசால்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 40 முதல் 64 வயதுடைய விதகைளும் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 முதல் 64 வரை வயதுடைய 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உடல் ஊனமுள்ளவர்களும்ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

எனவே உரிய விண்ணப்பத்தினை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளசமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரிடம் வருகிற 9-ந் தேதிக்குள்நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக