கோரிக்கை பதிவு

சுனாமி 5ம் ஆண்டு நினைவுநாள் கடற்கரையோர கிராமங்களில் கண்ணீர் அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் சுனாமி 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 16 கடற்கரை கிராமங்களில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேவனாம்பட்டினத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் ஆட்சியர் சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட வருவாய் அலு வலர் நடராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மீனவர் பேரவை, மாணவர்கள் பொது நல சேவை மையத்தின் சார்பில் தனித்தனியாக அமைதி பேரணி நடந்தது. அழகிரி எம்பி, ஐயப்பன் எம்எல்ஏ நகர்மன்ற தலை வர் தங்கராசு, மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழக னார், நகர்மன்ற துணை தலைவர் தாமரைசெல்வன், பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், மாணவர் அமைப் பின் தலைவர் ராஜா, செயலாளர் வினோத் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ& மாணவிகள் கலந்து கொண்டனர்.
அன்னை தெரசா பொது பொதுநல சேவை இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேராசிரியர் குழந்தைவேலனார், ஆசிரியர் ராஜன், ராஜேஷ், சண் முகம், ஜேம்ஸ், ரஞ்சித் குமார், பிரேமா, கலையரசி, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிங்காரவேலர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுபாஷ் தலைமை யில் தேவனாம்பட்டினத்தில் உள்ள நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் ரகு, மாநில துணை தலைவர் தினகரன், மாநில துணை பொதுசெயலாளர் தாமோ தரன், மண்டல அமைப்பாளர் தேவராஜ் கலந்து கொண்டனர்.
விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் அமைதி ஊர்வலங்கள் நடந்தது.
இது போன்று துறை முகம், சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளையில் உள்ள பில்லுமேடு கிராமம், தோணித்துறை அருகே அன்னன் கோயில், மாதா கோயில், வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட 16 கடற்கரை கிராமங்களில் உள்ள நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக