கோரிக்கை பதிவு

ஆறுகளின் குறுக்கே தடுப்பு சுவர் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு கூட்டம் கடலூரில் நடந்தது. தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மருதவாணன், இணைச்செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் புருஷோத்தமன், சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுனாமி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தர வேண்டும். சுனாமி தகவல் மையம் நவீன வசதிகளுடன் கடற்கரையில் உருவாக்கப்படவேண்டும். புதிதாக கடலில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எதிர்கால திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சுனாமி பாதித்த மாணவர்கள் ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை ஒரே இடத்தில் படிக்கும் வகையில் பல்கலைகழக அந்தஸ்துடன் கல்வி நிலையம் ஏற்படுத்த வேண்டும். சுனாமியால் உயிர் நீத்தவர்களின் நினைவாக மிகப்பெரிய நினைவுச்சின்னம் கட லூரில் அமைக்கப்பட வேண்டும். சுனாமி நீர் கெடிலம், பெண்ணையாற்றின் வழியாக சுமார் 7 கி.மீ தூரம் வரையிலும் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் இவ்வாறு ஏற்படாமல் இருக்க ஆறுகளின் குறுக்கே தடுப்புசுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக