கோரிக்கை பதிவு

திருவந்திபுரம் பகுதியில் குரங்குகள் கடித்து மாணவர்கள் காயம்

கடலூர் அருகே குரங்குகள் கடித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் மலைப்பகுதியில் குரங்குகள் அதிகம் காணப்படுகிறது. திருவந்திபுரம் பெருமாள் கோயி லுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வரும் உணவுகளை சாப்பிடும் போது, அங்கு குரங்குகள் வந்து உணவுகளை பிடுங்கி செல்கின்றன.
உணவு தர மறுத்தால் பக்தர்களை கடிக்க பாய்கின்றன. அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மதியம் நேரத்தில் மாணவர்கள் சாப்பிடும் போது, அங்கு சென்று மாணவர்களிடம் இருந்து உணவுகளை பறித்துக்கொண்டு செல்கின்றன. சில நேரங்களில் பள்ளி மாணவர்களை கடித்து விடுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரகுநாதன்(12), விக்னேஷ்(11) பிரவின்ராஜ்(11), அஜீத்குமார்(11) வசந்தா(11), அருண்பிரகாஷ்(15) உள்பட 30 மாணவர்கள் குரங்கு கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். அருகில் உள்ள கிராம மக்களையும் குரங்குகள் கடித்து வருகிறது. திருவந்திபுரம் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வனப்பகுதியில் விட வலியுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக