கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள்

கடலூர் ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்களின் இன விருத்தி காலமான ஏப்ரல் 15 முதல் 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீன் வளத்தை மேம்படுத்தி மீனவர்கள் பயன்பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகால உத்தரவை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை யாக ரூ.500 வழங்கப்படும். மீனவர் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்புக்கான 668 ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 87 ஆயிரத்து 482 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சப்& காண்ட்ராக்ட் விட்டதால் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்காக மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 648 குடிநீர் பணிகளுக்காக ரூ.9 கோடியே 78 லட்சத்து 3 ஆயிரமும், நகராட்சி பகுதிகளில் 99 குடிநீர் பணிகளுக்காக ரூ.2 கோடியே 6 லட்சமும், பேரூராட்சி பகுதிகளில் 267 பணிகளுக்காக ரூ.3 கோடியே 21 லட்சத்து 14 ஆயிரம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 14 பணிகளுக்காக இதுவரை ரூ.15 கோடியே 5 லட்சத்து 17 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சரி செய்யும் விதமாக என்.எல்.சி நிர்வாகத்திடமும் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்று மாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக