கோரிக்கை பதிவு

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

​ ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ தொடங்குகிறது.கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.​ கடலூர்,​​ விழுப்புரம்,​​ வேலூர்,​​ திருவண்ணாமலை,​​ காஞ்சிபுரம்,​​ திருவள்ளூர்,​​ சென்னை,​​ புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.சிப்பாய் நர்ஸிங் உதவியாளர்,​​ சிப்பாய் டெக்னீஷியன்,​​ சிப்பாய் பொதுப்பணி,​​ சிப்பாய் கிளர்க்,​​ சிப்பாய் வர்த்தகப் பணி,​​ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்,​​ உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.​ உதவி ரெக்ரூட்டிங் அலுவலர் கெடாவூர் தலைமையில் ஆள்கள் தேர்வுப் பணி நடக்கிறது.ஆட்சியர் பார்வையிட்டார்: ராணுவத்துக்கு ஆள்கள் சேர்க்கும் முகாம் ஏற்பாடுகளை,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார்.​ அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடப்பதால்,​​ 19-ம் தேதி வரை ​ விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.இந்த முகாமுக்கு தேர்வுக்காக தினமும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் முதல் கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்த்தல்,​​ அடுத்து உடல்திறன் தேர்வும்,​​ மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும்.இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு,​​ ஜூலை மாதத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு,​​ தகுதி அடிப்படையில் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக