கோரிக்கை பதிவு

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: மேலும் இரண்டு தனிப்படை அமைப்பு

மாவட்டத்தில் தொடர்ந்து கை வரிசை காட்டி வரும் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம் பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இரவு ரோந்து பணியும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

இருப் பினும் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி., தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் டி.எஸ். பி.,க்கள், சிறப்புபடை, ரவுடி ஒழிப்பு படை மற் றும் டி.எஸ்.பி.,க்களின் கிரைம் பார்ட்டிகள் கலந்து கொண்டனர். தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக் டர்கள் சிங்காரவேல் மற் றும் குமரேசன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர் களை விரைந்து பிடிக்கவும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக