கோரிக்கை பதிவு

மாசிமக திருவிழா நாளை கோலாகலம்

கடலூர் தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தாண்டு மாசிமக திருவிழா நாளை(28ம் தேதி) நடைபெறுகிறது.
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
200 போலீசார் பாதுகாப்பு படகு சவாரிக்கு தடை
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு நடந்த விழாவின் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது. கடலில் குளித்த போது மூழ்கி உயிரிழந்தவர் கள் சம்பவங்கள் நடந்துள்ளன.இவ்விழா தொடர் பாக பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து கடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோ சனை கூட்டம் நடந்தது.
டிஎஸ்பி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, கண்ணன், சப்&இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ஆனந்தபாபு, ப்ரியா, கவிதா மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி, கடலூர் முதுநகர், துறைமுகம் ஆகிய பகுதி கடற்கரை கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவிழா காண வரும் பொதுமக்களை விசைப்படகில் ஏற்றிக்கொண்டு ஆற்றிலோ, கடலிலோ செல்லக் கூடாது. குளிப்பதற்கு தடை விதித்து கண்காணிக்க வேண்டும். போதிய மின்விளக்குகள் தேவையான இடங்களில் அமைக்க வேண்டும். அமைதியான முறையில் திருவிழா நடைபெற பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கிராம நிர்வாகிகள் உதவி புரிய வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது. போலீசாருடன் கடற்கரை கிராமப்பகுதி மக்களும் நீரில் மூழ் காத வகையில் பாதுகாப்பு கவசங்களுடன் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என போலீஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் மாசி மக திருவிழாவுக்கு எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர், 8 சப்& இன்ஸ்பெக்டர், 72 போலீசார் மற்றும் 64 ஆயுதப்படையினர் உள்ளிட்ட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக