கோரிக்கை பதிவு

நகராட்சி கண்டுகொள்ளவில்லை சாலையை போலீசாரே சீரமைத்தனர்


நகராட்சியினர் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால் காவல்துறையினரே தற்காலிகமாக சீரமைக்கும் பணியை செய்தனர்.
கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக நகரின் அனைத்து பகுதி யிலும் சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் பணி முடிக்கப்பட்ட இடங்கள் சரிசெய்யப்படாமல் இருப்பதால் வாகனங்களில் செல்லும் மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தன. அதைத்தொடர்ந்து விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் என நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 
இந்நிலையில் மாவட்ட காவல் துறை அலுவலகம் உள்ள பகுதியிலும் பணி நடக்கவில்லை. இது குறித்து போலீசார் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடலூர் எஸ்பி அலுவலகம், சிறப்பு பிரிவு அலுவலகம், அதி விரைவுபடை, ஊர்க்காவல் படை அலுவலகம், காவலர் குடியிருப்பு, க்யூ பிராஞ்சு, மாவட்ட குற்ற புலனாய்வு துறை, தவுலத் நகர், ஆனைக்குப்பம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய ஆனைக்குப்பம் சாலை, எஸ்பி அலுவலக சாலை உள்ளிட்ட சாலைகளை போலீசாரே தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 லாரி செம்மண் மற்றும் கிராவல் மூலம் சாலையில் உள்ள குழிகளை மறைத்து சமன்படுத்தும் பணியை ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆலோக்கியராஜ், சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் மேற்பார்வையில் பணி நடந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது 1396984945 டிஐஜி கேட்டுக்கொண்டதின் பேரில் சம்பந்தப்பட்ட துறையினரிடம் டிஎஸ்பி முறையிட்டும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடந்தது. அதனால் போலீசார் மற்றுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து காவல் துறையினரின் நிதி பங்களிப்போடு தற்காலிகமாக சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக