கோரிக்கை பதிவு

கடலூரில் காவல்துறை ஒத்திகை நிகழ்ச்சி

கடலூர் ஆயுதப்படை போலீசாருக்கு படை திரட்டு பயிற்சி முகாம் கடலூர் ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடந்தது.
15 நாள் பயிற்சி முகாம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. 400 போலீசார் பயிற்சி பெற்றனர். கவாத்து பயிற்சி, தடியடி பிரயோகம், கண்ணீர் குண்டு வீசும் முறை, துப்பாக்கி சுடுதல், முதலுதவி மற்றும் மீட்பு பணிகள், நவீன துப்பாக்கி கள் பயன்படுத்துதல் உள் ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கவாத்து பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் பார்வையிட்டார். டி.எஸ்.பி ஹரிகிருஷ்ணன் உடனிருந் தார். அணிவகுப்பு மற்றும் கலவர கும்பலை அடக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சிகள் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் நடந்தது.கலவரம் கட்டுக்கடங்காமல் போகவே எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் மீது துப் பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்தவரை போலீசார் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். கல வரம் அடக்கப்பட்டது.
நிஜ நிகழ்ச்சியை போல் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 400 போலீசார் கலந்து கொண்டனர். செயல்முறை நிகழ்ச்சியை நேரில் பார்த்த எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக