கோரிக்கை பதிவு

நிகழ்ச்சிகள் முடிந்த 2 நாள்களில் பேனர்களை அகற்றிவிட கடலூர் போலீஸ் உத்தரவு

கடலூர், பிப். 21: கடலூர் போலீஸ் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகள் முடிவடைந்த 2 நாள்களில், டிஜிட்டல் பேனர்களை அகற்றிவிட வேண்டும் என்று, போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.அனைத்துக் கட்சிகள் கூட்டம் கடலூரில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நகரில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போலீஸ் அனுமதி பெற்றுத்தான் பேனர்கள் வைக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்தான் பேனர்களை வைக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்து 2 நாள்களில் பேனர்களை அகற்றிவிட வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் காவல்துறை மூலம் அகற்றப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர். கூட்டத்தில் தி.மு.க. சார்பில் தனஞ்செயன், அதிமுக நகரச் செயலாளர் குமரன், ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, மதிமுக  நகரச் செயலாளர் சேகர், நகராட்சி  உறுப்பினர் ராஜா, பாமக நகரச் செயலாளர் தாண்டவராயன், தேமுதிக நகரச் செயலாளர் தட்சிணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக