கோரிக்கை பதிவு

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,448 கோடி திட்ட மதிப்பீடு தயார்

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ஆயிரத்து 448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க முன்னோடி வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான கடன் திட்டம் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயத்திற்கு 1,017 கோடியே 24 லட்சம்,  தொழில்களுக்கு 66 கோடியே 89 லட்சம், இதர முன்னுரிமை கடன்களுக்கு 364 கோடியே 40 லட்சம் என மொத்தம் 1,448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை வர்த்தக வங்கிகள் 1,139 கோடியே 22 லட்சம், கூட்டுறவு வங்கிகள் 219 கோடியே 16 லட்சம், பல்லவன் கிராம வங்கி 82 கோடியே 67 லட்சம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 7 கோடியே 48 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்ட அறிக்கையை வங்கியாளர்கள் கூட்டத்திற்கு தலைமை 

தாங்கிய கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டார். நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் ராஜகோபாலன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முத்துக்கருப்பையா, இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் பிற வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னோடி வங்கி மேலாளர் கபிலன் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக