கோரிக்கை பதிவு

கடலூரில் துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்

கடலூரில் ரூ.1,000 கோடியில் துறைமுக பணிகள் விரைவில் தொடங்க தயார் நிலையில் உள்ளது என ஐயப்பன் எம்எல்ஏ கூறினார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதியில் அரசு நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நகர திமுக சார்பில் நடந்தது. நகர அவைத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். கடலூர் நகர்மன்ற தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். கழக பேச்சாளர் ஏகாம்பரம் பேசினார்.
கூட்டத்தில் ஐயப்பன் எம்எல்ஏ பேசும்போது, கடலூர் நகர, ஒன்றிய பகுதியில் மக்கள் நல திட்டங்களுக்கான பணிகள் அரசு சார்பில் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம், வட்டியில்லா கடன், முது கலை வரை இலவச கல்வி என எண்ணற்ற பயன்களை மக்களுக்கு முதல்வர் வழங்கி வருகிறார். கடலூர் பகுதி மக்கள் முன்னேற்றம் காண தொழில் துறையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடிப் படையில் பல்வேறு நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் செயல்பட துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ரூ.1,000 கோடியில் துறைமுக பணிகள் அனைத்து கட்ட நிர்வாக வேலைகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளது, என்றார். கவுன்சிலர்கள் பூங்காவனம், தமிழ்மாறன், இளங்கோ, நித்யானந்தம், சிவானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் கஜேந்திரன், ரவிராஜ், மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன், ஜெயசந்திரன், சித்ராலயா ரவி, தனஞ்செயன், சிவக்குமார், ஆதிபெருமாள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
ஐயப்பன் எம்எல்ஏ தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக