கோரிக்கை பதிவு

கடலூர் நேத்தாஜி சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு

கடலூர் நேத்தாஜி சாலை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
கடலூர் மஞ்சக்குப்பம் முதல் டவுன்ஹால் வரை சாலை குறுகலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் இந்த சாலை அகலப்படுத்தும் திட்டம் இருந்தது. அதற்குள் திட்டப்பணி முடிந்து விட்டதால் சாலை அகலப்படுத்தும் திட்டமும் கைவிடப்பட்டது.
குறுகலான இந்த சாலையில் இருபுறமும் நடைபாதைக்கென பிளாட்பாரம் போடப்பட்டுள்ளதால், சாலை மேலும் குறுகலாகிவிட்டது. இதனால் வாகனங்கள் சென்றுவர முடியாததால் நேத்தாஜி சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதன் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட பிளாட்பாரத்தில், கடைகளுக்கு முன்பு கீற்று கொட்டகை போட்டு நடைபாதை கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்லும் மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.
இந்நிலையில் இந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரம் முன்பு தாசில்தார் தட்சணாமூர்த்தி முன்னிலையில் நகர நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. சிலர் தாமாகவே ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றிக் கொண்டதால் சாலை சற்று விசாலமாக காணப்பட்டது. இந்த நிலை ஓரிரு தினங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அப்பகுதி வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு முன் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கொட்டகை போட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக