கோரிக்கை பதிவு

பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு விலை குறையும் வாய்ப்பு

பண்ருட்டியில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு பலாப்பழ விளைச்சல் அதிகரிப்பு மற்றும் பலாப்பழம் கூடுதல் விலை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டியில் தற்போது தினந்தோறும் நான்கு லாரிகள் அளவில் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. பண்ருட்டி பலாப்பழம் சுவையும், இனிப்பும் அதிகமாக இருப்பதால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசி வரை பலாப்பழம் விற்பனைக்கு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது ஒருகிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. 20 நாட்களுக்கு பின் தினந்தோறும் 10 லோடுகள் பலாப்பழம் வரத்துவங்கினால் பலாப்பழ விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக