கோரிக்கை பதிவு

கோவில் கட்டி சாலைகள் ஆக்கிரமிப்பு : சர்வே எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறாக சாலையோரம், அரசு புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை சர்வே செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை, நகராட்சி சாலையில் அரசு புறம்போக்கில் கோவில் கட்டி அதன் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது.  சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை  சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கோவில் கட்டடங்கள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவற்றை சர்வே செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், அதன் புகைப்படங்கள், ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள விவரம் போன்றவற்றை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சர்வேயர்கள் சர்வே செய்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் சாலையில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் நாளை அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக