கோரிக்கை பதிவு

பல்லவர் கால சிவன் கோவில் பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு

பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தில் பல்லவர் கால சிவன்கோவில் மற்றும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத் தூரில் உள்ள தருணேந்து கேசரி உடனுறை நாகநாத ஈஸ்வரர் கோவில்  திருப்பணியின் போது, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி சிவஞானம் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் கல் வெட்டு ஆய்வாளர் பண் ருட்டி தமிழரசன் மற்றும் புதுப் பேட்டை கோவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: பண்ருட்டி தாலுகாவில் திருவதிகை வீரட்டானேஸ் வரர் கோவில் மட்டுமே பல்லவர் கால கோவிலாக வரலாற்றில் இருந்தாலும், அருகில் உள்ள சிறுவத்தூரில் பல்லவர்கால கோவிலும், சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது வரலாற்றுக்கு புதிய செய்தியாகும். எனவே 1,700 ஆண்டுகளுக்கு முன்பே சிறுவத்தூர் ஏதோ ஒரு வகையில் சிறப்பிடத்தை பெற்றிருந்தது என கருதப்படுகிறது.
இவ்வூரை ஒட்டிய கெடில ஆற்றங்கரையில் சங்ககால செங்கற்களும், மண்பாண்டங்களும், விளக்கு வகைகளும் ஏற்கனவே எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சிறுவத்தூர் நாகநாத ஈஸ்வரர் தென்புற திருச்சுற்றில் கி.பி.ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்க ஆவுடையார் மட்டில் பூமியில் புதைந்த நிலையில் உள் ளது. 390 செ.மீ., சுற்றளவும் 12 செ.மீ., அகலமும் கொண்ட இந்த ஆவுடையார் பல்லவர் காலத்தை சேர்ந்தது.
அதை சேர்ந்த சிவலிங் கமே இக்கோவிலின் கருவறையில் வைத்து வழிபட்டதாகும். விநாயகர், சண்டிகேசுவரர் எட்டுபட்டை கொண்ட சிவலிங்கம் ஆகிய அனைத்தும் பல்லவர் காலத்தில் வழிபட்டதாகும்.
அடுத்து ஆட்சிக்கு வந்த சோழர்கள் காலத்திலும் இக்கோவில் பராமரிக்கப் பட்டுள்ளது. இதற்கு சான்று களாக தென்முக கடவுள், பைரவர், சூரியன், உமையவள் சிலைகள் உள்ளன. சோழர்களுக்கு பின், இப்பகுதியை ஆண்ட விஜயமாநகர - நாயக்கர் காலங்களிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கி.பி., ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் - சண்டிகேசுவரர் சிற்பங்கள் வேறெங்கும் காண்பதற்கரிய கலைப்படைப்பாகும். இதுபோன்ற 

இக்கோவிலின் தல விருட்சமான மருதமரமும், களரிவாகை எனப்படும் வெற்றிவாகை மரமும் இக்கோவிலின் பழமையை உணர்த்துகின்றன.
இக்கோவில் கருவறை வெளிப்புறம் சுற்றுசுவரில் இருந்த கல்வெட்டுகள்  100 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்த போது சிமென்ட் கலவையால் பூசி மறைக்கப்பட்டுவிட்டன. இதனால் இக்கோவிலின் வரலாறு ஆய்வுக்குரியது. இவ்வாறு பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக