கோரிக்கை பதிவு

அடிப்படை வசதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூரில் 25 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்காததைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் திடீர்குப்பம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 110 குடும்பங்கள் வசிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த நகரில் வசிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சியால் வழங்கப் படவில்லை.இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை திடீர் குப்பம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க கிளைச் செயலர் புகழேந்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் சுப்புராயன், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக