கோரிக்கை பதிவு

நீர் ஆதார மராமத்து பணிகளை மே மாதத்தில் முடிக்க வேண்டும் : குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

வெள்ளத்தடுப்பு மற்றும் நீராதார மராமத்து  பணிகளை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செய்து முடித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் கடலூரில் நடந்தது.
கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் பல் வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அனுப்பிய ஆயிரம் கோடி ரூபாயிற்கு அரசு 540 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் துள்ளது. இதற்கான செயல் பாடுகள் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். நீர் ஆதார பணிகள் மழை காலத்தில் செய்தால் முறைகேடு அதிகளவு நடக்கும். எனவே, நீராதார பணிகளுக்கு ஜனவரி மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஏப்ரல்,மே மாதங்களில் பணிகளை முடித்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில், அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் 2008ம் ஆண்டு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்து தற்போது தர மறுக்கும் மானியத்தை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என்றார். கொத்தட்டை ஆறுமுகம் பேசுகையில், பெண்ணாடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மந்தமாக நடக்கிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்றதற்கு, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி பிரச் னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார். மஞ்சக்கொள்ளை விஜயகுமார் பேசுகையில், தாமதமாக  தண்ணீர் விட்டதால் கடைமடை பகுதியில் 7 கிராமங்களில் 600 ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கின்றன. உடன் தண்ணீர் விட வேண்டும் என்றார். இதற்கு, தற்போது மராமத்து பணி நடக்கவுள்ளதால் தண்ணீர் விட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார். குறுக்கிட்ட கலெக்டர், 600 ஏக்கர் பாதிக்கப்படுவது குறித்து பொதுப்பணித்துறையினர் பரிசீலித்து உடன் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார். பசமுத்தான் ஓடை விவசாய சங்க ரவீந்திரன் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை சார்பில் நமது மாவட்டத்திற்கு 40 பவர் டிரில்லர் வழங்கப்பட் டுள் ளது. ஆனால் விழுப்புரத்திற்கு 80ம், நாகைக்கு 70ம் வழங்கப் பட்டுள்ளது. தேவை அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்திற்கு மிகவும் குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டினார். உடன் கலெக்டர், கூடுதல் இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மணல் திருடினால்... கலெக்டர் எச்சரிக்கை :  வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவர்களை கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் விவசாய மின் மோட்டார் கேபிள் அடிக்கடி திருடு போகிறது. இதனை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, கார்மாங்குடி வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கலெக்டர், அனுமதி இல்லதா இடங்களில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக புகார் செய்கிறீர்கள். நடவடிக்கை எடுத்தால் குறை கூறுகிறீர்கள். விவசாயிகள் தங்களுக்கு மணல் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துணை தாசில்தாரிடம் அனுமதி பெற்று தேவைக்கு மட்டும் மணல் எடுத்துக் கொள்ளலாம். அனுமதி சீட்டு இன்றி மணல் ஏற்றி வருவேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேபோன்று விவசாய மின் மோட்டார் கேபிள் திருடுவோர் 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர். விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக