கோரிக்கை பதிவு

பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் செம்மொழி விழா

கடலூர் பெரியார் கலைக்  கல்லூரி தமிழ்த்  துறை சார்பில்  தமிழ்செம் மொழி  விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் ரங்கநாதன்  தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர்  டாக்டர்  கொற்கைவேந்தன் முன்னிலை வகித் தார்.சிறப்பு விருந்தினராக  அய்யப்பன் எம்.எல்.ஏ., செம்மொழி விழாவை  துவக்கி வைத்து பேசினார்.

செம்மொழி விழாவில்  நடந்த கவிதை போட்டி,  ஓவியம், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற  கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.நகர மன்ற தலைவர் தங்கராசு, துணைத் தலைவர்  தாமரைச் செல்வம், பேராசிரியர் அர்த்தநாரி,  நகர் மன்ற உறுப்பினர் கோவலன்,கோவிந்தசாமி உட்பட  பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக