கோரிக்கை பதிவு

கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கல்லூரி ஆசிரியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் (படம்) இருந்தனர்.கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதம் நடந்தது.கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரதத்துக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்க கடலூர் வட்டத் தலைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலர் சாந்தி முன்னிலை வகித்தார். சங்கப் பொருளர் சம்பத் தொடங்கி வைத்தார்.உண்ணாவிரதத்தை பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் என்.பாலகிருஷ்ணன் முடித்து வைத்துப் பேசினார். பாஸ்கரன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக