கோரிக்கை பதிவு

அரசு பணிகளில் தமிழை முதன்மைப்படுத்த வேண்டும்

கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ஆட்சி மொழிப் பயிலரங்கம் கடலூர் ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட உதவி இயக்குநர் ஆருண்ரசீத் வரவேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் பயிலரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, உலகத் திலேயே தொன்மையும், பெருமையும் வாய்ந்தது தமிழ்மொழி. நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமை யாக கருதுகிறோம். நம் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்ச்சி அடை கிறோம். முதலில் நம் மொழியை நாம் மதிக்க வேண்டும். தமிழ்மொழியில் எழுதவும், பேசவும் வேண் டும். அடுத்த தலைமுறைக் கும் தமிழின் அருமையை நாம் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் மொழிக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தர வேண்டும். அலுவலக பணிகளை தமிழில் செய்ய வேண்டும், என்றார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பேசும்போது, தமிழ் பேசும் மக்களின் வரி பணத்தில் அரசு அலுவலர்கள் சம்பளம் பெறுகிறோம். நாம் செய்யும் பணிகள் மக்களுக்கு புரி கின்ற வகையில் இருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத் திட வேண்டும். அரசு பணிகளை தமிழ்மொழியில் மேற்கொள்ள வேண்டும். நம் தாய்மொழியை ஆட்சி பணிகளில் முதன்மை படுத்திட வேண்டும், என்றார். அரசு அலுவலர்களுக்கு மொழி பயிற்சியை பெரியார் அரசுக்கல்லூரி உதவி பேராசிரியர் அர்த்த நாரி அளித்தார். ஆட்சி மொழி ஆய்வும், குறைகளும் பற்றி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் புலவர் ஆறுமுகம், குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் குறித்து முனைவர் ராஜேந்திரனும் அளித்தனர்.
இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் ஆட்சியர் சீத்தாராமன் தலைமை உரையாற்றுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக