கோரிக்கை பதிவு

திறமையான மாணவர்களே எங்களது நோக்கம் : பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் பேட்டி

திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியின் புதிய நிர்வாக இயக்குனரான கெவின்கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியை தற்போது சி.கே.கல்வி நிறுவனத்தின்  நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளது. இக்கல்லூரியை மாநில அளவில் சிறந்த கல்லூரியாக உருவாக்கி,  ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுப்பொலிவுடன் நடத்தப்படும். இங்கு படித்து பட்டம் பெற்று வெளியே செல்லும் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் நிர்வாக திறன்படைத்தவர்களாக இருக்க வேண்டும். இதற்காக திறமைமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் அளவிற்கு மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோளாகும்.
அடுத்தாண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும். இந்தியாவின் தலை சிறந்த கல்வியாளர்களை கொண்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வழிவகை செய்யப்படும். இந்நிறுவனத்திலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார். உடன் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், சி.கே.கல்வி குழும இயக்குனர் சந்திரசேகரன், முன்னாள் நிர்வாக இயக்குநர் சேகர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக