கோரிக்கை பதிவு

தலைமை பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு

விழுப்புரம்&மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டப் பணிகளை தலைமை பாது காப்பு ஆணையர் இன்றும், நாளையும் இறுதி கட்ட ஆய்வு செய்கிறார்.
விழுப்புரம்&மயிலாடு துறை 122 கி.மீ அகல ரயில்பாதை திட்டம் ரூ.186 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2007 ஜனவரி மாத்தில் தொடங் கிய பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் நிலையில் உள்ளது. சிக்னல்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ரயில்வே கேட் பகுதிகளை ஒட்டி சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
ரயில்வே தொழிட்நுட்ப வல்லுநகர்கள், தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் பலமுறை இந்த ரயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தினர். குறைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி சான்று அளித்த உடன் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷ்ணன் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புத் துறை அறிவுறுத்திய அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புத்துறை தலைமை ஆணையர் சுதிர்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் சுதிர்குமார் விழுப்புரம்&மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் ஆய்வு நடத்துகிறார். இதற்காக அவர் தனி ரயிலில் இன்று விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் வரையிலும் அடுத்த நாள் 17 ஆம் தேதி சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் ஆய்வு நடத்துகிறார். ஆய்வு பணிகளின் போது ரயில்பாலங்கள், சிக்னல் தொழில்நுட்பங்கள், ரயில் திருப்பங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி உடனடியாக சான்று அளித்தால் இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் விழுப்புரம்&மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்போக்குவரத்து தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வு பணி நடப்பதால் ரயில் பாதையில் பொதுமக்கள் நடக்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் போக்குவரத்து துவங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக