கோரிக்கை பதிவு

சில்வர் பீச்சை சுத்தம் செய்த ​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர்

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை,​​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.கோடைகாலம் தொடங்கி விட்டதால் கடலூர் சில்வர் பீச்சுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.​ மேலும் கடந்த ஞாயிறுக்கிழமை மாசிமகம் திருவிழா சில்வர் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நடந்தது.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடினர்.​ இதனால் கடற்கரை முழுவதும் பாலித்தீன் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்து காணப்பட்டன.குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.​ இதைத் தொடர்ந்து கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சில்வர் பீச்சில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினர்.இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் திரைப்பட இயக்கச் செயலர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ இயக்குநர் தமிழாதரன்,​​ உதவி இயக்குநர் ​ தமிழ்ச் சான்றோன்,​​ ​ செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சனி,​​ காத்தமுத்து தட்சிமாமூர்த்தி,​​ சிவா,​​ பிரசாத் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் பேசுகையில்,​​ கடலூர் சில்வர் பீச்சுக்கு திரைப்படம் ஒன்றிற்கான கலந்துரையாடலுக்காக வந்தோம்.​ ஆனால் இங்கு குப்பைகள் நிறைந்து மிக மோசமாகக் காட்சி அளித்தது சில்வர் பீச்.எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த,​​ துப்புரவுப் பணியில் ஈடுபட்டோம் என்றும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக