கோரிக்கை பதிவு

சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்த உள்ள ஐ.நா குழுவினரை சந்திக்க, விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபதி, பொதுச்செயலாளர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் கீழ் அனுவம்பட்டு ரவீந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் உருவாக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற் சாலைகளால் நமது உணவு, குடிநீர், சுவாசிக்கும் காற்று மூன்றும் நஞ்சாகிவிட்டது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் வேக மாக சிதைக்கப்பட்டு வருகின்றன. சிப்காட் தொழிற்சலைகளால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகி றது. உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள் ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள விவசாய விளை நிலங்களை பாதுகாப்பது விவசாயிகளின் கடமை. இது குறித்து ஆய்வு நடத்த ஐ.நா சபையின் உணவு உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி ஆலிவர் ஷட்டர் தலைமையிலான குழு இன்று கடலூர் வரு கிறது. குழுவில் வழக்கறி ஞர், மருத்துவர், உணவுப்பொருட்கள் உற் பத்தி திறன் குறித்து ஆய்வு நடத்தும் பேராசிரியர்கள், விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர். பியான் அமைப் பின் தமிழ்நாடு தலைவர் குருசாமி குழுவை வழி நடத்துகிறார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இக்குழுவினர் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளையும், அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடலோர பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்துகின்றனர்.தொடர்ந்து இன்று(31ம் தேதி) மாலை கடலூர் டவுன்ஹாலில் விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்கள். இந்த நிகழ்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனை வரும் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாது காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
விவசாயிகளுக்கு அழைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக