கோரிக்கை பதிவு

கடலூர்&பாலூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதம்

கடலூரில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் தினமும் பஸ், லாரி, கார், போன்ற வாகனங்கள் செல்கிறது. இதுதவிர இரு சக்கர வாகனங்களும் அதிகம் செல்கிறது. குறுகிய சாலையாக இருந்ததால், அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.
விபத்துகளை தடுக்கும்பொருட்டு சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கப்பட்டது. கீழ்அருங்குணம் பகுதியில், சாலையின் ஒரு பக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்காததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்துகளுக்கு வழி விட்டு செல்ல முற்படும் போது சாலையின் ஒரத்தில் உள்ள பள்ளம் தெரியாமல், பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதேபோல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துகளை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட பணி, முடிவடையாமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த கீழ்அருங்குணம் பகுதியில் சாலை அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் நடந்து வருகிறது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக