கோரிக்கை பதிவு

கடலூர் நகரில் தரமில்லாமல் போடப்பட்ட சாலை உள்வாங்கியது

கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் தரமில்லாமல் உள் வாங்கியுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் கடந்த 21.1.2007ம் தொடங்கப் பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்படும் பணிகள் 31.12.2008ம் தேதி முடித்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் மேலும் ஒன்னரை ஆண்டுகள் கூடுதலாகியும் பணிகள் இதுவரை முடிவடையவில்லை. இதற்கிடையே நகர சாலைகள் சின்னபின்னமாகி கிடந்ததால் கடலூர் மக்கள் பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. தற்போபாது குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடைத்திட்டம் முடிக் கப்பட்ட 170 சாலைகளை நகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது. அதில் ஒரு சில பகுதிகளில் சாலைகள் போடப் பட்டுள்ளன. ஆனால் தரமில்லாமல் போடப் பட் டுள்ளதால் ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்தும், பாதாள சாக்கடைத்திட் டத் திற்காக தோண்டப்பட்ட பள்ளத் தில் உள்வாங்கியும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக