கோரிக்கை பதிவு

சொத்து வரி பாக்கி:​ ​ ​ 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்

கடலூர் நகராட்சிக்குச் சொத்துவரி ​(வீட்டு வரி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான வரி)​ தண்ணீர் வரி செலுத்தாத,​​ 15 ஆயிரம் பேருக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடலூர் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ.​ 10 கோடியைத் தாண்டி உள்ளது.​ இதனால் நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு,​​ ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஜனவரி 31-ம் தேதி வழங்க வேண்டிய ஊதியம் வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட வில்லை.எனவே வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.​ கடந்த ஒரு மாதமாக தண்டோரா மூலம் வீதி வீதியாக சென்று வரியைச் செலுத்துமாறு கோரப்பட்டு வருகிறது.​ வாகனங்களிலும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,​​ கடலூர் நகராட்சிக்கு வர வேண்டிய வரிபாக்கி ரூ.​ 10 கோடிக்கு மேல் உள்ளது.​ வரிப் பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.​ வெள்ளிக்கிழமை வரை ரூ.​ 2 கோடி வசூல் ஆகி இருக்கிறது.மீதம் உள்ள பாக்கியையும் படிப்படியாக வசூலிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.​ வரிபாக்கி உள்ளவர்களுக்கு 4 முறை கால அவகாசம் அளித்து நோட்டீஸ் அளிக்கப்படுகிறது.முதல் நோட்டீஸ் 15 நாள்களுக்குள் செலுத்துமாறும்,​​ அடுத்து 7 நாள்களுக்குள் செலுத்துமாறும்,​​ பின்னர் 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.3 முறை கால அவகாசம் அளித்தும் வரியைச் செலுத்தாவிட்டால் 4-வது முறையாக,​​ ஜப்தி நோட்டீஸ் அளிக்கிறோம்.​ இதுவரை கடலூர் நகராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக