கோரிக்கை பதிவு

சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கு வாய்ப்பு

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய செவிலியர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 5ம் தேதி கொச்சியில் நடக்கிறது.இது குறித்து ஓவர்சிஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிட் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பி.எஸ்.சி. பெண் செவிலியர்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற பெண் பிசியோதெரபிஸ்ட்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 5ம் தேதி முதல் 21ம் தேதிவரை கொச்சியில் நடக்கிறது.

பெண் செவிலியர்கள் (ஓராண்டு அனுபவம்), பிசியோதெரபிஸ்டுகள் (இரண்டாண்டு அனுபவம்) மற்றும் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்களின் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல், வெள்ளை நிற 6 புகைப்படத்துடன் எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 20 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான வெளி நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் நடைபெறும் நேர்முகத் தேர்வு தொடர்பிலான நடைமுறைகளை வரும் 5ம் தேதிக் குள் செய்திட வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக