கோரிக்கை பதிவு

சுய உதவிக் குழு நிதி ரூ.6.5 லட்சம் கையாடல்

ஆடவர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை ரூ.​ 6.5 லட்சத்தைக் கையாடல் செய்ததாக,​​ தொண்டு நிறுவன நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் அருகேயுள்ள நடுவீரப்பட்டு பகுதியில் சிற்பி,​​ முத்தமிழ்,​​ பாரதி என்ற பெயரில் ஆடவர்களுக்கான 3 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.​ இக் குழுக்களை கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள தொண்டு நிறுவனம் வழிநடத்தி வந்தது.​ ரூ.​ 15 லட்சத்தில் விசைத்தறி அமைக்கும் பொருட்டு,​​ இந்த 3 குழுக்களையும் இணைத்து நியூ டாண் பேப்ரிக் பெடரேஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.​ இதில் ரூ.​ 7.5 லட்சம் அரசு மானியமாகவும் ரூ.​ 7.5 லட்சம் வங்கிக் கடனாகவும் வழங்கப்பட்டது.÷இவைத் தவிர விசைத்தறிக் கூடம் அமைக்க 20 சென்ட் நிலத்துக்கு ரூ.​ 1.​ 45 லட்சமும்,​​ கட்டடத்துக்கு தலா ரூ.​ 2 ஆயிரம் வீதம் உறுப்பினர்கள் 36 பேர் வழங்கினர்.இந்நிறுவனத்தின் பொதுக் குழு,​​ செயற்குழு தீர்மானம் மற்றும் அனுமதி இன்றி வங்கியில் எந்த தொகையும் எடுக்க முடியாது என்று இருந்தபோதும்,​​ சுய உதவிக் குழுக்களின் நியூ டாண் பேப்ரிக் பெடரேஷனுக்காக வழங்கப்பட்ட அரசு மானியத்தில்,​​ ரூ.​ 6.5 லட்சத்தை பொதுக் குழு,​​ செயற்குழு அனுமதியின்றி தொண்டு நிறுவன நிர்வாகியே வங்கி மேலாளரின் உதவியுடன் கையாடல் செய்து விட்டாராம்.இதையடுத்து, ​​ அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,​​ சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடுவீரப்பட்டு எம்.​ ராஜன்,​​ சி.​ குப்புசாமி,​​ வி.​ ஆறுமும் உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸிடம் புகார் அளித்துள்ளனர்.​ மேலும்,​​ இத் தொண்டு நிறுவன நிர்வாகி மேலும்,​​ பல்வேறு சுய உதவிக் குழுக்களிடமும் மோசடி செய்து இருப்பதாக அப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக