கோரிக்கை பதிவு

நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் முறைகேடு : கடலூர் நகர மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் 'திடுக்'

கடலூர் நகராட்சி நிர் வாகம் சரியாக நடக்கவில்லை காங்., அ.தி. மு.க., கவுன்சிலர்களின் குற்றச்சாட்டிற்கு பா.ம.க., வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நகர மன்றக் கூட் டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

கடலூர் நகர மன்றத் தின் இயல்பு கூட்டம் நேற்று சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கமிஷனர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தை துவங்கி வைத்து சேர்மன் தங்கராசு பேசுகையில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் 72 கி.மீட்டர் சாலை போடப்பட்டுள் ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் புதிதாக பொறுப் பேற்றுள்ள நிர்வாக பொறியாளர் இந்தாண்டிற்கு பாதாள சாக்கடை பணிகள் முடித்து கொடுப்பதாக உறுதியளித்திருப்பதாக கூறினார்.
தொடர்ந்து நடந்த கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:
காங்., சர்தார் பேசுகையில், நகரில் சுகாதார சீர் கேடு காரணமாக அனைத்து வகையான காய்ச்சல் பரவி வருகிறது. நகராட்சி சிறப்பு முகாம் நடத்தியிருந்தால் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். மருத்துவ காப்பீட்டு திட்ட அடை யாள அட்டையில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. முழு முகவரி இல்லாததால் இரண் டாயிரம் அட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள் ளது. முழு விபரங்களுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க., கந்தன் பேசுகையில், நகரில் சுற் றித்திரியும் 600 நாய்களுக்கு அறுவை சிகிக்சை செய் துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. தற்போது 1886 நாய்களுக்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யாமலேயே கணக்கு காட்டி ஊழல் செய்துள்ளனர். நகராட்சியில் எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்ற பதிலே கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் வரி வசூலிக்காமல் உள்ளது. புதிய வரி விதிப்புகள் இல்லை. இப்படி இருந்தால் பணம் எப்படி இருக்கும் என்றார்.

சுகாதார சீர்கேடு காரணமாக நகரில் விஷ காய்ச்சல் பரவிவருகிறது. குப்பைகள் அள்ளுவதில்லை. சாக்கடை கால்வாய்கள் தூர்ந்து கிடக்கிறது என அ.தி.மு.க., குமார் குற்றம் சாட்டினார். அப்போது பா.ம.க., ராதாகிருஷ்ணன், எதற்கெடுத்தாலும் நகராட்சியை குற்றம் சாட்டுகிறீர்களே என்றதால் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதம் ஏற் பட்டது. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பா.ம.க., செந்தில், கமலநாதன் பேசியதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தி.மு.க., குணசேகரன், சுயேச்சை முத்து ஆகியோர் லாரன்ஸ் ரோட் டில் ரயில்வே சுரங்கப் பாதை வருமா? வராதா? என்பதை சேர்மன் தெளிவு படுத்த வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த சேர்மன், ரயில்வே சுரங்கப் பாதை கட்டாயம் வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர் என்றார். இறுதியாக துணைத் தலைவர் தாமரைச்செல் வன் பேசுகையில், நகரில் குடிநீர் வழங்க மேலும் இரண்டு லாரிகள் வாங்க வேண்டும். திருட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக