கோரிக்கை பதிவு

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டம்

இந்​திய ஜன​நாயக வாலிபர் சங்கத்தினர் கடலூரில் புதன்கிழமை கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் 55 லட்சம் பேர் இருக்கும்போது,​​ ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தக் கூடாது.​ போக்குவரத்து,​​ மின்சாரம்,​​ வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.​ சேதுக்கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு,​​ இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் என்.எஸ்.அசோகன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன்,​​ பொருளாளர் வி.ராமகிருஷ்ணன்,​​ துணைச் செயலாளர்கள் ஆர்.அமர்நாத்,​​ பி.வாஞ்சிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக