கோரிக்கை பதிவு

மகளிர் குழுவினர் துப்புரவு பணி

பாதிரிக்குப்பம் ஊரட்சியில் "சுகாதார மகளிர் குழுவினர்' கொண்டு துப் புரவு பணி துவங்கப்பட் டுள்ளது.கடலூர் ஒன்றியம், பாதரிக்குப்பம் ஊராட்சி பகுதியை சுகாதாரமாக வைத் துக் கொள்ள புதிதாக "சுற் றுப்புற சுகாதார மகளிர்' குழுவை ஏற்படுத்தி துப்புரவு பணி மேற்கொள்ள திட்டமிட்டது. இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் மாதம் 20 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.சுகாதார மகளிர் குழுவினர் மூலம் துப்புரவு பணியை ஊராட்சி தலைவர் கோமதி  சிவலிங்கம் துவக்கி வைத் தார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் ரூபாதி, திருவந்திபுரம் மருத்துவ அலுவலர்கள் சுரேஷ்குமார், சுஜாதா, வேலுமணி, கிராம சுகாதார செவிலியர்  அனுசுயா, களப்பணியாளர் பத்மநாபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக