கோரிக்கை பதிவு

சாலையோரங்களில் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும்

கடலூரின் முக்கிய சாலைகளின் ஓரங்களில் அதிக அளவில் மண் படிந்துள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூரில் லாரன்ஸ் சாலை, அண்ணா பாலம், பாரதி சாலை, நேதாஜி சாலை, கடற்கரைச் சாலை, நெல்லிக்குப்பம் சாலை, புதுப்பாளையம் மெயின் ரோடு, முதுநகர் சாலை ஆகிய சாலைகள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளாகும். நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை களின் வழியாக சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். போக்குவரத்து அதி கம் காரணமாக சாலை களின் ஓரங்களில் மண் அதிகளவில் படிந்து வருகி றது. சாலைகளின் ஓரம் படியும் மண் அப்புறப் படுத்தப்படாமல் உள்ள தால், மண் மலை போல் குவிந்துள்ளது.
கடலூர் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் டேங்கர் லாரி கள், லாரிகள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஏராளமானவை சாலை களில் செல்லும் போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் வாகனங்களை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்போது சாலை ஓரத் தில் குவிந்திருக்கிற மண் வாகனங் களை சறுக்கி விழச் செய் கிறது.
இத னால் கட லூரின் முக் கிய சாலை களில் அடிக் கடி விபத்து கள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மண்ணில் வாகனங்கள் சிக்கும்போது, பின்னால் வரும் வாகனம் மோதி உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடு கிறது.
குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் பெற்றோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
சாலையோரத்தில் மண் அதிக அளவில் படிந்திருப்பதால் சாலையோரத்திலும் செல்லமுடியாமல் பின்னால் மோதுவதை போல் வரும் வாகனங்களிடமிருந்தும் தப்பிக்க வழி தெரியாமல் ஒரு வித பயத் தோடு செல்லவேண்டிய நிலை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக