கோரிக்கை பதிவு

தகவல் உரிமை சட்டத்தில் தகவல் தராத வேலை வாய்ப்பு அலுவலருக்கு அபராதம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தராத மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.சிதம்பரம் முருகன் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்தவர்களின் விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரிடம் கேட்டிருந்தார். ஆனால், தகவல் ஆணைய விதிகளின் படி குறித்த காலத்தில் பதில் தரவில்லை.

இதுகுறித்து பாலசுப்ரமணின், மாநில தகவல் ஆணையத்திடம் 2008 ஜனவரி 1ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் தகவல் ஆணையம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு அவகாசம் கொடுத்தும் பதில் தரவில்லை.தகவல் உரிமைச் சட்ட விதிமுறையின்படி தகவல் தராததால் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தகவல் உரிமை ஆணைய உதவி பதிவாளர் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக