கோரிக்கை பதிவு

விழுப்புரம்-​ மயிலாடுதுறை அகல ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

விழுப்புரத்துக்கும், ​​ மயிலாடுதுறைக்கும் இடையே 122 கி.மீ.​ தொலைவுக்கு ரூ.400 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜி.எஸ்.​ நாயர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.இப்பணிகள் தொடங்கியதையொட்டி,​​ இப்பாதையில் 2006-ம் ஆண்டு ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.​ 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பணிகள் நிறைவடைந்து,​​ கடந்த மாதம் 5-ம் தேதி முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, ​​ கடந்த 10-ம் தேதி தென்னக ரயில்வே மேலாளர் தீபக் கிரீசன் சோதனை ரயில் மூலம் இப் பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.​ அப்போது அவர் கூறுகையில்,​​ மார்ச் மாதம் இறுதியில் பணிகள் முழுமையாக முடிவுறும்.​ அதன் பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்தவுடன் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில்,​​ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜி.எஸ்.​ நாயர் வெள்ளிக்கிழமை தனி டிராலி மூலம் மயிலாடுதுறையிலிருந்து ஆய்வு மேற்கொண்டார்.​ மயிலாடுதுறை,​​ சீர்காழி,​​ கொள்ளிடம்,​​ சிதம்பரம் வரையிலான பாதையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.​ ரயில்பாதை,​​ பாலங்கள்,​​ கட்டடங்கள்,​​ சிக்னல்கள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறித்து 30 நிமிடங்கள் ஆய்வு நடத்தினார்.ஆய்வின்போது ஆணையருடன் திருச்சி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன்,​​ மேலாளர் ​(இயக்குதல்)​ முருகுதாஸ்,​​ உதவிகோட்ட மேலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக