கோரிக்கை பதிவு

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா விடுத்துள்ள அறிக்கை:
விழுப்புரம்&மயிலாடுதுறை இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கி 4 வருடங்களாகிறது. இன்னும் முடிந்தபாடில்லை. ரயில்வே அதிகாரிகள் மாதந்தோறும் ஒவ் வொரு தகவலை கூறி வருகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல அவதிப்படுகின்றனர். தனியார் ஆம்னி பேரூந்துகளின் அதிக கட்டணத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் திருச்சி முதல் சென்னை வரை 336 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அகல பாதையாக மாற்றும் பணி 13 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் அகல பாதையை 4 வருடம் வரை கால தாமதமானதற்கு காரணம் என்ன.
பிப்ரவரி 10ம் தேதி ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிர்ஷன், பணிகளை ஆய்வு செய்து விட்டு, மார்ச் இறுதியில் பயணிகள் ரயில் ஓடும் என கூறியுள்ளார். சிதம்பரம் ரயில் நிலைய கட் டிடப் பணி 2004ம் ஆண்டு துவங்கி இன்று வரை நிறைவு பெறாமல் உள்ளது.
எனவே, ரயில்வே அதிகாரிகள் அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்து மார்ச் இறுதிக்குள் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மா.கம்யூ., கோரிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக